நிர்மலாதேவி விவகாரம்.. ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவில் 2 பெண் உறுப்பினர்கள் நியமனம்!
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தை விசாரணை செய்யும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவில், விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மதுரை: பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தை விசாரணை செய்யும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் குழுவில், விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்ற போது அங்கு வந்த சில உயர் அதிகாரிகள் மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் படிப்பில் சலுகையும், பணமும், இன்னும் சில உதவிகளும் செய்வதாக கூறியுள்ளனர். நிர்மலா இதுபற்றி அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் செல்போனில் பேசியுள்ளார்.

நிர்மலாதேவி பேசிய இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த ஆடியோவில் ஆளுநர் பெயரும் இருந்ததால் பிரச்சனை பெரிதானது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக்குழுவிற்கு உத்தரவிட்டார். அதே சமயம் இதில் பெண் உறுப்பினர்களை நியமிக்க விரும்பினால் சந்தானம் நியமித்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த குழு மதுரையில் விசாரணையை தொடங்கியுள்ளது. சந்தானம் கமிஷனுக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அன்னை தெரசா பல்கலை. பேராசிரியை கமலி, வேளாண்கல்லூரி பேராசிரியை தியாகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
மாணவிகளிடம் விசாரணை நடத்த வசதியாக பெண் பேராசிரியைகள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மதுரையில் சந்தானம் பேட்டி அளித்துள்ளார். இதில் மாணவிகளிடம் எந்த மாதிரி கேள்விகள் கேட்கப்படும் என்பதை இப்போது கூற முடியாது என்றுள்ளார். மேலும் நிர்மலா தேவி விவகாரம் பற்றி விவரம் தெரிந்த பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications