மதுரை ஆதீனத்திற்குள் நுழைய முயன்றால் கடும் நடவடிக்கை.. நித்தியானந்தாவுக்கு வக்கீல் எச்சரிக்கை
Recommended Video

சென்னை: மதுரை ஆதீனத்திற்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு ஏற்கனவே தடை உள்ளது. அவர் அதை மீறி நுழைய முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானமாக நித்தியானந்தாவை கடந்த 2012ம் ஆண்டு தற்போதைய ஆதீனம் நியமித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நித்தியானந்தாவும் தனது சிஷ்யர்களோடு ஆதீனத்திற்குள் நுழைந்தார். இதனால் மதுரையே அல்லோகல்லப்பட்டது.

இந்த நிலையில் இந்த நியமனத்தை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அதேபோல ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதனால் மதுரை பக்கம் வர முடியாமல் இருந்தார் நித்தியானந்தா.
இந்த நிலையில் மதுரை செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார் நித்தியானந்தா. அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் கூறுகையில் நேற்றைய தினம், மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானமாக நித்தியானந்தா தொடரலாம் என்பது போல தீர்ப்பு வெளியானதாக தவறான தகவல் பரப்பி வருகின்றனர். அதில் உண்மை இல்லை. அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
அவர் குற்றப் பின்னணி கொண்டவர். அவர் மடத்துக்குள் வரஉயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எக்காலத்திலும் அவர் வர முடியாது. அப்படி வந்தால் கடுமையான நடவடிக்கையை எடுப்போம் என்று கூறினார் ஜெயச்சந்திரன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications