மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்
திருச்சி: முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பொதுவெளியில் பேசிய விஜய், மாநில உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மையில் எந்த சமரசமும் இருக்காது என்று திட்டவட்டமாக கூறினார். மேலும், நதி நீர் உரிமைகளை விட்டு கொடுக்கவே மாட்டோம். சமூக நீதி, சமத்துவ நீதியை ஒருநாளும் விட்டு கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய 234 தொகுதியும் நம்ம தொகுதிதான் என்று அவர் கூறினார்.
தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பொதுவெளியில் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால், விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியது. எதிர்பார்ப்புக்கு ஏற்ப விஜய் சரவெடியாக வெடித்தார்.

ஆனால் தேர்தல் முடிந்த பிறகும் பிரசார பாணியிலேயே விஜய்யின் இன்றைய பேச்சு இருந்தது. விஜய் தனது பேச்சில் வழக்கம் போல திமுகவை கடுமையாக அட்டாக் செய்து பேசினார். அதேபோல, தனது மதசார்பற்ற கொள்கையிலும், மாநில சுயாட்சியிலும் உறுதியாக நிற்பேன் என்று கூறினார். விஜய் கூறியதாவது:-
மாநில உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம்
தனிப்பெரும்பான்மை பெற்று இருந்தாலும் நம்மை நம்பி முறையாக கூட்டணியில் ஆதரிக்க வர்றவங்களை ஆதரித்தே இருப்போம். தவெக ஆட்சி எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லாருக்குமான ஆட்சியாகத்தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஸ்டாலின் மாதிரி ஊசலாட்டம் இருக்காது. மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமே கிடையாது. மாநில உரிமைகளை விட்டு கொடுக்கவே மாட்டோம்.
நதி நீர் உரிமைகளை விட்டு கொடுக்கவே மாட்டோம். சமூக நீதி, சமத்துவ நீதியை ஒருநாளும் விட்டு கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய 234 தொகுதியும் நம்ம தொகுதிதான். அதில் எந்த கட்சி ஜெயிச்சிருந்தாலும் அது நம்ம தொகுதிதான். பெரம்பூராக இருக்கட்டும், திருச்சி கிழக்காக இருக்கட்டும் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி.. அதிலும் திருச்சி கிழக்கு என் செல்லப்பிள்ளை மாதிரி.. அதனால் வரப்போற இடைத்தேர்தலில் உங்க வீட்டில் இருக்கும் ஒருவரை உங்களில் ஒருத்தரைத்தான் நிற்க வைக்க போறோம்" என்றார்.
மேகதாது அணை விவகாரம்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று ஒற்றைக்காலில் டிகே சிவக்குமார் உள்ளார். காங்கிரஸ் ஆளும் கட்சியாக கர்நாடகாவில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த சூழலில்தான், நதி நீர் பிரச்சினையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தனது பேச்சில் கூறியிருப்பது மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு விஜய் கொடுத்த மெசேஜ் ஆகவே பார்க்கப்படுகிறது. அதேபோல, தனது கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்தும் விதமாக மதசார்பற்ற கொள்கையிலும் ஊசலாட்டம் இன்றி உறுதியாக இருப்பேன் என்று பேசியுள்ளார்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்?














Click it and Unblock the Notifications