ஹெலன்' தமிழகத்தை ஒன்றும் செய்யாது.. மீன்பிடிக்கப் போகலாம்... மழையும் வராது... வானிலை மையம்
சென்னை: ஹெலன் புயல் ஆந்திராவை நோக்கி முழுமையாக திரும்பி விட்டது. எனவே தமிழகத்திற்கு இனி மழை கிடைக்காது. மேலும் மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்கப் போகலாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஆந்திராவை நோக்கி ஹெலன் புயல் நகர்ந்து விட்டது. இது காவாலி என்ற இடத்தில் நாளை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலால் தமிழகத்திற்கு ஆபத்து வருமோ என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. ஆனால் இந்தப் புயலால் தமிழகத்திற்கு ஒரு ஆபத்தும் வராது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

காரணம், ஆந்திர கரையோரமாகத்தான் இது கரையைக் கடக்கப் போகிறது. சென்னை அல்லது தமிழகத்தின் வேறு கடலோரப் பகுதியை நோக்கி இது திரும்ப வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல தமிழகத்திற்கு மழை வாய்ப்பும் இல்லை என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் போகலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications