அப்பாடா.....சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை இல்லை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது அடுத்த 2 நாட்களில் வலுவிழந்து படிப்படியாக தமிழகத்தில் மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னைக்கான மழை ஆபத்துநீங்கிவிட்டது. அடுத்த 24 மணிநேரத்தில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலு குறைந்து தாழ்வு நிலையாக மாறும்.
அந்த தாழ்வு நிலையும் அடுத்த 48 மணி நேரத்தில் வலு இழந்துவிடும். நேற்று முன்தினம் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூரில் அதிகபட்சமாக 13 செ.மீட்டர் மழையும் அதற்கு அடுத்த படியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் 12 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
இவ்வாறு ரமணன் கூறினார்.












Click it and Unblock the Notifications