For Quick Alerts
For Daily Alerts
Just In
அம்மா உணவகத்தில் லாப, நஷ்டம் பற்றி கவலையில்லை... முதல்வர் தடாலடி பேட்டி
அம்மா உணவகத்தில் லாபம், நஷ்டம் குறித்து கவலையில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சேலம்: அம்மா உணவகத்தில் லாபம், நஷ்டம் குறித்து கவலையில்லை என்றும் அவை தொடர்ந்து செயல்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதுகுறித்து சேலம் எடப்பாடியில் முதல்வர் பழனிச்சாமி கூறுகையில், அம்மா உணவக திட்டம் ஏழைமக்கள் பசியாற வேண்டும் என்ற சேவை நோக்கமுடையது. இதனால் அந்த திட்டத்தில் லாப, நஷ்டம் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை.
அம்மா உணவகத்துக்கென்று நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால் அதை மூடும் திட்டம் ஏதும் இல்லை. நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
எங்கள் அணிக்கு வருமாறு எந்த எம்எல்ஏ-க்களிடமும் பேசவில்லை. அவர்களாகவேதான் வருகிறார்கள். சட்டம் ஒழுங்கை சீர் குலைப்போர் மீது தவிர்க்க முடியாத சூழ்நிலையால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.
Comments
English summary
Edappadi Palanisamy says that Amma canteen project is a service based one, so we are not considering about the profit or loss.