எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது... சொல்கிறார் திவாகரன்
முடக்கப்பட்ட இரட்டை இலையை ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டணியால் மீட்க முடியாது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என்றும் இரட்டை இலை சின்னத்தை அவர்களால் மீட்டெடுக்க முடியாது என திவாகரன் கூறியுள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், மக்கள் பிரச்சனையில் எதிர்கட்சிகள் போராடும் போது அவர்களுக்கு குரல் கொடுப்போம் என்றும் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து பேச அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் என்றும் கூறினார்,

நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் என்பது ஒரு சம்பிரதாயமான கூட்டம், அதில் நிர்வாகிகள், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. தமிழக மக்களின் பிரச்சனைகளில் எதிர்கட்சிகளுடன் இணைந்து போராடுவோம் என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications