முன்கூட்டியே ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலையாவதை யாரும் தடுக்க முடியாது - உயர்நீதிமன்றம்
சென்னை: ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அதை அனுபவித்து வரும் கைதிகள் முன்கூட்டியே விடுதலை ஆவது தவறில்லை. அதை யாரும் தடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜேந்திரன் என்பவரது வழக்கில் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

ஆயுள் தண்டனைக் கைதி்யான ராஜேந்திரனை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் ராஜேந்திரனால், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அரசு முடிவை எதிர்த்து ராஜேந்திரனின் உறவினர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
ஆனால் தமிழக அரசின் முடிவுப்படி தம்மை விடுதலை செய்யக்கோரி ராஜேந்திரன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உயரிநீதிமன்ற நீதிபதிகள் தமிழ்வாணன் மற்றும் சி.டி.செல்வம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதற்காக அவரை விடுதலை செய்யக் கூடாது என்று சட்டத்தில் கூறப்படவில்லை. யாருடைய விடுதலையையும் யாரும் தடுக்க முடியாது.
தமிழக அரசு உத்தரவிட்டபடி ஆயுள் கைதி ராஜேந்திரனை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications