அறப்போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை தடுக்கும் அருகதை யாருக்கும் இல்லை - கமல்
இளைஞர்கள் போராட்டத்தில் சினிமா நட்சத்திரங்கள் பங்கெடுத்து அந்த கவன ஈர்ப்பை பெறக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரியும், மத்திய அரசு அவசர சட்டம் நிறைவேற்றக் கோரியும் மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர். சென்னை தொடங்கி நெல்லை வரை பட்டி தொட்டி எங்கும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இளைஞர்கள் ஒன்றுக்கூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடிகர்கள் நேரடியாக சென்றும், டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டும், மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இப்போராட்டம் தொடர்பாக கமல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "குரல் கொடுக்க வேண்டிய கடமையை மாணவர்கள் கையில் எடுத்துள்ளார்கள். அது அவர்களின் குரலாக இருக்க வேண்டும்.
முதல் முறையாக பெருமைப்படும் அளவுக்கு நல்ல முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற ஒட வைத்திருக்கிறார்கள்.
இதில் சினிமா நட்சத்திரங்கள் பங்கெடுத்து அந்த ஒளியை வாங்கிக் கொள்ளக் கூடாது என நான் நினைக்கிறேன். இது அவர்களுடையப் போராட்டம். நாளைய அரசியல்வாதி அங்கு இருக்கக்கூடும். ஆகவே அவர்களை மிரட்டக் கூடாது. அறப்போராட்டத்தில் ஈடுபடும் அவர்களை தடுக்கும் அருகதை யாருக்கும் இல்லை" என்று தெரிவித்துள்ளார் கமல்.
கடந்த சில வாரங்களாகவே கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications