ஒருத்தரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரல…. வெறிச்சோடி கிடந்த சென்னை மண்டல அலுவலகங்கள்
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுக்களை வேட்பாளர்கள் நேற்றிலிருந்து தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எந்த மண்டலத்திலும் ஒரு வேட்பாளர் கூட வந்து மனுக்களை தாக்கல் செய்யவில்லை. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்கள் உள்ள மாநகராட்சி மண்டலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு செப். 25 மாலையில் அறிவிக்கப்பட்டது. மறுநாளான நேற்று அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் தேதி அறிவிப்பால் அதிமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் தயார் நிலையில் இல்லை.

திமுக, காங்கிரஸ், மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாநில தேர்தல் ஆணையத்தின் திடீர் அறிவிப்புக்கு கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய முதல் நாளான நேற்று ஒருவரும் வரவில்லை. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
சென்னை மாநகராட்சி மொத்தம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 15 மண்டலங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பாளர்களிடம் இருந்து வேட்பு மனுக்களை பெற காலை 10 மணி முதல் தயார் நிலையில் இருந்தனர். ஆனால், நேற்று மாலை வரை ஒருவர் கூட வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வரவில்லை. இதனால், தேர்தல் அலுவலர்கள் காலை முதல் மாலை வரை அமர்ந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பொதுவாக அரசியல் கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவித்தப் பின்னர்தான் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் முதல் நாளில் இருந்தே வேட்புமனுக்களை தாக்கல் செய்ய தொடங்கி விடுவார்கள்.
இந்த முறை, மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் சுயேச்சை வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேட்பு மனுக்களை முதல் நாளிலேயே தாக்கல் செய்ய தயார் நிலையில் இல்லை. எனவே, சென்னை மாநகராட்சி உட்பட்ட தேர்தல் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications