சிம்புவைக் கைது செய்ய போலீசாருக்கு எந்தத் தடையும் இல்லை!- உயர் நீதிமன்றம்
சென்னை: ஆபாச பாடலை உருவாக்கிப் பாடிய சிம்பு மற்றும் அனிருத்தைக் கைது செய்ய எந்தத் தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் நடிகர் சிம்பு எந்த நேரமும் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது. அனிருத் கைதிலிருந்து தப்பிக்க கனடாவிலேயே பதுங்கியுள்ளார். அவரது தந்தையிடம் மீண்டும் சம்மனை வழங்கியுள்ளனர் போலீசார்.
இன்று சிம்பு தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதனை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன் பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைத்தார்.

மேலும் சிம்பு, அனிருத்தின் பீப் பாடலை அவர் உணவு இடைவேளையின்போது கேட்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் அரசுத் தரப்பில்.
பிற்பகலுக்குப் பிறகு நடந்த விசாரணையின்போது, சிம்புவுக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்று அரசுத் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மகளிர் அமைப்புகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் சிம்புவுக்கு ஜாமீன் தரக்கூடாது என்றனர்.
பின்னர் இந்த வழக்கை வரும் ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார் நீதிபதி. சிம்பு விசாரணைக்காக நேரில் ஆஜராக போலீசார் குறிப்பிட்டிருந்த டிசம்பர் 30 ம் தேதியை, ஜனவரி 4 வரை நீட்டிக்கலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
அதே நேரம், போலீசார் சிம்புவைக் கைது செய்ய எவ்விதத் தடையும் இல்லை என்றால், தேவைப்பட்டால் எந்த நேரமும் போலீசார் கைது செய்யலாம் என்றும் உத்தவிட்டார்.
அனிருத் தகரப்பில் முன்ஜாமீன் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அவரும் இந்தப் புகார் குறித்த விசாரணைக்கு வரவேண்டும் என கோவை மற்றும் சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆகவே அனிருத்தைக் கைது செய்யவும் போலீசுக்கு எந்தத் தடையும் இல்லை. எனவே கனடாவிலிருந்து அவரை சென்னை திரும்ப போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தெரிவித்தனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications