ஈழத் தமிழருக்கு எதிராக எந்தக் காட்சியும் வைக்கவில்லை!- வெங்கட்பிரபு
சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி படத்தில் ஈழத் தமிழருக்கு எதிராக எந்தக் காட்சியும் வசனமும் வைக்கப்படவில்லை என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்துக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கவில்லை.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த ‘மாசு என்கிற மாசிலாமணி' படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை.

படத்தில் ஈழத்தமிழ் பேசுகிறவனா.. ‘உன்னை உதைக்க வேண்டும்' என்று ஈழத்தமிழர்களையும், ஈழத்தமிழையும் கொச்சைப்படுத்துவதுபோல் வசனம் இருந்ததால்தான் வரிச்சலுகை அளிக்கவில்லை என்று தணிக்கை அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக பாடலாசியர் சினேகன் தெரிவித்திருந்தார்.
படத்தில் ஒரு காட்சி. அதில் ஈழத் தமிழரான சூர்யாவின் நிலங்களை தமிழகத்தில் இருக்கும் தாதாவான சமுத்திரக்கனி அன்ட் கோ பறித்துக் கொள்கிறது.
அதைத் தட்டிக் கேட்கிறார் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் சூர்யா. அப்போது சூர்யா பேசும் தமிழை வைத்து அவரிடம், ‘நீ சிலோனா' என சமுத்திரக்கனி கேட்பார். உடனே சூர்யா, ‘தமிழின்டா நான். சொந்த மன்ணைப் பறி கொடுத்துப் போட்டு தனக்கு ஒரு அடையாமில்லாம இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறவனோட வலி என்னவெண்டு தெரியுமா உனக்கு' என்பார்.
இந்தக் காட்சியில் ஈழத் தமிழர்கள் கொச்சைப்படுத்துள்ளதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் அளித்துள்ள பதில்:
ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் வசனங்களோ காட்சிகளோ அந்தப் படத்தில் இல்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மலேசியாவில் வசிக்கும் ஈழத் தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்துக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
படத்தை பார்த்த ஈழத் தமிழர்கள் யாரும் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. வெளிநாடுகளில் முதல்நாள் முதல் காட்சியில் படம் பார்த்தவர்கள் பெரும்பாலும் ஈழத்துத் தமிழர்கள்தான்," என்றார்.











Click it and Unblock the Notifications