அதிமுக கோட்டையில் மோதுபவர்கள்தான் தலைதான் உடையும்.. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இன்று மாலை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், சிலர் இந்த ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார்கள்.
எஃகு கோட்டையில் மோதுபவர்கள் தலைதான் உடையும். மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை கலைக்க சதி செய்கிறார்கள்.

இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள், அப்படியானால் ஏதாவது உதாரணம் சொல்லுங்கள்.
இவர்களே போராட்டங்களை நடத்தி கொந்தளிப்பை ஏற்படுத்த முயல்கிறார்கள். மக்கள் இந்த அரசை காப்பாற்றிக்கொண்டுள்ளார்கள், எனவே அரசுக்கு ஆபத்து ஏற்படாது என்றார் முதல்வர்.
கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு நலத் திட்டங்களையும் அப்போது முதல்வர் அறிவித்தார். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டப்படும், தென்பெண்ணை ஆதாரமாக கொண்டு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும், ஒசூர் நகராட்சி மாநகராட்சியாக மேம்படுத்தப்படும், கிருஷ்ணகிரி நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications