தமிழகம், புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு இன்று முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை தாக்கல் செய்யலாம். வாக்குப் பதிவு ஏப்ரல் 24-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இன்று காலை முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் ஊர்வலமாகவோ, வாகனங்கள் புடைசூழவோ வரக்கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் 100 மீட்டருக்குள்ளாக வேட்பாளருடன் 3 கார்கள் மட்டுமே வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வேட்பாளர் பிரசாரத்திற்கான செலவுகள் அனைத்தும் வேட்பாளர்களின் கணக்கில் வரும்.
அத்துடன் செலவுக் கணக்குகளை கண்காணிக்க ஒரு தொகுதிக்கு இரண்டு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வேட்பாளர்களும் இவர்களது கண்காணிப்பின் கீழ் வருவர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications