Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருப்பசாமி பாண்டியன் கைதானால் ஜாமீன் கிடைக்காது...கிடுக்கிப் பிடி வழக்குப் பதிவு!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது போடபப்ட்டுள்ள வழக்கின் பிரிவுகளால் திமுகவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். காரணம், அத்தனையும் ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகள் ஆகும்.

நெல்லை டவுனை சேர்ந்த தி.மு.க.,பிரமுகர் நாலடியாரின் மகள் தமிழரசி. இவர் கட்சியில் பொறுப்பு கேட்டு, நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியனை சந்திக்க சென்ற இடத்தில் அவர் ஆபாசமாக பேசியுள்ளார். தமிழரசியின் தந்தையை வெளியே இருக்கச்செய்துவிட்டு பாலியல் ரீதியாக பேசியுள்ளார்.

இதுகுறித்து தமிழரசி நெல்லை டி.ஐ.ஜி.,அலுவலகத்தில் புகார் செய்தார். இதுகுறித்து தென்காசி ஏ.எஸ்.பி.,அரவிந்தன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் மன்னவன் ஆகியோர் நேரடியாக நெல்லை வந்து தமிழரசியிடம் விசாரணை மேற்கொண்டனர். நெல்லை எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த விசாரணையின் போது, அவர் பேசிய போன் எண், உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

Non bailable sections shock Karuppasamy Pandian's supporters

எனவே கருப்பசாமிபாண்டியன் மீது பெண்களை எதிரான வன்கொடுமை சட்டம் (செக்ஷன் 4 ஆப் விமன் ஹராஸ்மென்ட் ஆக்ட்), அவதூறாக திட்டுவது 294 (பி),கொலைமிரட்டல் 506 (2) விடுத்தது ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.

இவற்றில் இரண்டு பிரிவுகள் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகள் என்பதால் அவர் கைதானால் ஜாமீன் கிடைப்பது சிரமம் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+