'குழந்தைச்சாமியும்' அவரின் கொடூரக் கொலைகளும்!
சென்னை: குழந்தை முகத்தில் ஒரு கொடூரன்.. என்ற வார்த்தை பக்காவாக பொருந்திப்போவது வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்-க்கு மட்டுமே.
பார்க்க பன்னு மாதிரி கன்னம், குழந்தை தனமாக குண்டு உடல்வாகு, கபடமற்ற சிரிப்பு என அக்மார்க் குழந்தையாகவே காட்சியளிக்கும் இந்த நபரின் உள்ளே குவிந்து கிடக்கிறது கொடூரம்.
கிம்மின் சர்வாதிகார தந்தை செய்த கொலைகளைவிட, கிம் ஜோன் உன் செய்த கொலைகள் 7 மடங்கு அதிகம் என்று பீதியுடன் கூறுகிறார்கள் வட கொரிய மக்கள். 32 வயதான கிம் கடந்த 2011ம் ஆண்டு தனது தந்தை கிம் ஜாங் இல் செத்துப் போன பிறகு பதவிக்கு வந்தார்.
ராணுவம், அரசுத்துறை, குடும்பத்தார் என யாராக இருந்தாலும் விட்டதில்லை கிம். பிடிக்கவில்லை என்றால் கொன்று ஓய்த்துவிடுவார். உதாரணத்திற்கு சில கொடூர கொலைகளை பாருங்கள்.

ராணுவ துணை அமைச்சர்
ராணுவ துணை அமைச்சராக இருந்த கிம் சோல், 2012 ஜனவரியில் பீரங்கியை வைத்து சுட்டு கொல்லப்பட்டார். செய்த குற்றம்-அதிபரை அவமரியாதை செய்ததாம். ராணுவ அமைச்சர் கிம் ஜோங் காக், அதே ஆண்டு மே மாதம், கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட விதமும், காரணமும் இன்னும் வெளியாகவில்லை.

பீரங்கியால்
பாதுகாப்பு துறை துணை அமைச்சர் கிம் யோங் சன், 2012 மே மாதம், பீரங்கியால் சுட்டு கொல்லப்பட்டார். காரணம் தெரியவில்லை. ராணுவ தளபதி ரி யோங் ஹோ, 2012 ஜூலையில் ராணுவத்தாரால் சுட்டு கொல்லப்பட்டார்.

ராணுவ தளபதி சுட்டு கொலை
கைது செய்ய அதிபர் உத்தரவிட்ட நிலையில், அதை தவிர்க்க தளபதி துப்பாக்கியை பிரயோகிக்க பதிலுக்கு ராணுவமும் துப்பாக்கியால் சுட்டு கொன்றது. குற்றம் என்னவென கூறப்படவில்லை.

விமானப்படை தளபதி
விமானப்படை தளபதி ரி பையோங்-சோல் 2014, ஆகஸ்ட் மாதம், கொல்லப்பட்டார். குற்றமும், கொல்லப்பட்ட விதமும் தெரிவிக்கப்படவில்லை.
பாதுகாப்பு துறை அமைச்சர் ஹையோங் யோங் சோல் கடந்த ஆண்டு மே மாதம், விமானத்தை வீழ்த்த பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். தலைமைக்கு விரோதமாக செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

விஷம்
கிம் கையோங் ஹுய் என்ற கிம்மின் உறவுக்கார பெண்மணி, 2014 மே மாதம் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். அவரது கணவரை கிம் கொன்றதை புகார் கூறியதற்காக இந்த தண்டனையாகும். 2012ல் சொந்த தாய் மாமனையும் கொன்றவர் கிம். கடந்த மாதம், கிம்மின் உத்தரவை செயல்படுத்தாத இரண்டு அரசு அதிகாரிகளை நிற்க வைத்து விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

100 பேர்
இதேபோல, அதிபரை அவமதிக்கும் வகையில் உட்கார்ந்திருந்ததாக வடகொரியாவின் துணைப்பிரதமர் கிம் யாங் ஜின் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு சுமார் 100 பேரை இதுவரை கொடூரமாக கொன்றுள்ளார் கிம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications