For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்தாண்டில் மழை குறித்து நல்ல வார்த்தை சொன்ன வானிலை ஆய்வு மையம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டது. இந்நிலையில் வடக்கிழக்கு பருவமழை காலம் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Northeast monsoon is not over for Tamil Nadu

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்,

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் 4ம் தேதியுடன் முடிந்தது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.

தற்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனால் வடகிழக்கு பருவமழை காலம் இன்னும் முடியவில்லை.

கணிப்புகள் மற்றும் ஆய்வின்படி வடகிழக்கு பருவமழை மேலும் 10 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்த இறுதி ஆய்வு முடிவு ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.

இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து மாலத்தீவு அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்களில் மழை பெய்யாது. சென்னையை பொறுத்த வரை வறண்ட வானிலையே நிலவும் என்றனர்.

English summary
Chennai Meteorological centre said that northeast monsoon season may extend for 10 more days in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X