புத்தாண்டில் மழை குறித்து நல்ல வார்த்தை சொன்ன வானிலை ஆய்வு மையம்
சென்னை: வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டது. இந்நிலையில் வடக்கிழக்கு பருவமழை காலம் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்,
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் 4ம் தேதியுடன் முடிந்தது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.
தற்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனால் வடகிழக்கு பருவமழை காலம் இன்னும் முடியவில்லை.
கணிப்புகள் மற்றும் ஆய்வின்படி வடகிழக்கு பருவமழை மேலும் 10 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்த இறுதி ஆய்வு முடிவு ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.
இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து மாலத்தீவு அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்களில் மழை பெய்யாது. சென்னையை பொறுத்த வரை வறண்ட வானிலையே நிலவும் என்றனர்.
-
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன்












Click it and Unblock the Notifications