தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்றில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இன்றில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து கொண்டே செல்கிறது. இது புயல் சின்னமாக மாறியுள்ளது.
கடந்த சில நாட்களாக வங்ககடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. இதனால் இன்று தமிழ்நாட்டில் மழை பெய்யும்.
[ஊட்டியில் பயங்கர மழை.. இடி தாக்கி 100-வருட பழமையான மரம் எரிந்து கருகியது]
தொடக்கம் எப்படி
வெப்பசலனமும் இந்த மழைக்கு காரணம் என்று கூறப்படுகிறது ஒரு வாரத்திற்கு முன் வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இது வலுப்பெற்று நேற்று தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
புயல் சின்னம்
இது நேற்று மாலை புயலாக மாறியது. இதற்கு லூபன் என்று அழைக்கப்படுகிறது. இது வலுடைந்து கொண்டே செல்கிறது. அதே சமயம் தற்போது வடகிழக்கு பருவமழையும் தொடங்கி இருக்கிறது.
ஓமன் நோக்கி நகரும்
இந்த புயல் ஓமன் கரையை நோக்கி நகரும். புயல் ஓமனை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு கிடையாது. ஆனால் கடலோர பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
எங்கு மழை
இந்த சமயத்தில் தமிழகத்தில் மழை பெய்யும். சென்னையில் மிதமான மழை பெய்யும். டெல்டா பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ராமேஸ்வரம், குமரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.