தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை: துரைமுருகன் தாக்கு
Subscribe to Oneindia Tamil
வேலூர்: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் இன்று நடைபெற்றது. பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்தார்.
வாக்களித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது பற்றி தேர்தல் ஆணையத்திடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications