ம.ந.கூ.வால் எங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை, அது ஒரு ஆல்பபெட் கலவையாக்கும்: கார்த்தி சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

கோவை: மக்கள் நலக் கூட்டணியால் எங்களுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது. அந்த கூட்டணி ஆல்பபெட் கலவையாக உள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வரும் சட்டசபை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால் தொகுதி பங்கீடு குறித்து கவலை இல்லை.

Not worried about MNK: Karti Chidambaram

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் என் தந்தை இல்லாதது பற்றி கவலை இல்லை. அந்த குழுவில் உள்ள அனைவரும் எங்கள் நண்பர்கள்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு எல்லாம் இல்லை. தேர்தல் என்று வந்துவிட்டால் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து மக்களிடம் வாக்கு சேகரிப்பார்கள். அனைத்து கட்சிகளிலும் கோஷ்டி பூசல் இருப்பது இயல்பானது தான்.

மக்கள் நலக் கூட்டணியால் எங்களுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது. அந்த கூட்டணி ஆல்பபெட் கலவையாக உள்ளது. நான் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நான் வருமான வரி மற்றும் சொத்துக்களை பதிவு செய்யும் ஆவணங்களை சமர்பித்துள்ளேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+