For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிப்.28ல் முக்கிய முடிவை அறிவிக்கப்போகிறேன்.. டி. ராஜேந்தர் அதிரடி பேட்டி

இவ்வளவு நாட்களாக சத்திரியனாக பார்த்த என்னை சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள் என்று டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: வரும் 28ம் தேதி எனது அரசியல் வாழ்வில் முக்கிய முடிவினை அறிவிக்க உள்ளேன் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார். இவ்வளவு நாட்களாக சத்திரியனாக பார்த்த என்னை சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

நடிகர் சிம்புவை ஒழித்து, அவரது நடிப்புக்கு முட்டுக்கட்டை போட தயாரிப்பாளர் சங்கம் கட்டபஞ்சாயத்து செய்கிறது என்றும் டி. ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

Now Chatriyan next Chanakyan says T.Rajender

சென்னை தியாகராயநகரில் உள்ள தமது வீட்டில் ஜெலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

செய்தியாளர்களிடம் பேசிய டி. ராஜேந்தர், படம் வெளியாகி 6 மாதங்களுக்குப் பின் யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் சிம்பு மீது குற்றம்சாட்டிய தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், கூண்டோடு ரவுடிகளை வீட்டுக்கு அழைத்து வந்து தம்மையும், தன் மகனையும் மிரட்டினர்.

சிலம்பரசனை ஒழித்துக் கட்ட வேண்டும் என சிலர் நினைப்பதாகவும், சிம்புவின் நடிப்புக்கு முட்டுக்கட்டை போட தயாரிப்பாளர் சங்கம் கட்டபஞ்சாயத்து செய்கின்றனர். அனைத்தையும் மீறி சிலம்பரசன் வெற்றி பெறுவார்.

நான் சிம்புவிற்கு பாதர் என்றால் சிம்பு ரசிகர்களுக்கு காட் பாதர் என்றும் டி. ராஜேந்தர் கூறினார். வரும் 28ஆம் தேதியன்று முக்கிய முடிவு அறிவிப்பேன். இதுநாள் வரை என்னை சத்திரியனாக பார்த்தீர்கள், இனி சாணக்கியனாக பார்ப்பீர்கள் என்றும் டி ராஜேந்தர் கூறினார்.

English summary
LDMK leader T.Rajender said that I am going to announce a key decision in my political life on the 28th February.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X