தபால் நிலையங்களிலும் ஆதார் கார்டு திருத்தம் செய்யலாம்... அரசு அறிவிப்பு
நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் கார்டு திருத்தம் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை : ஆதார் கார்டுகளில் திருத்தம் செய்ய, சென்னையில் 10 தபால் நிலையங்களில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாளை முதல் இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி தபால் நிலையங்களில் ஆதார் கார்டுகளில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை தலைமை தபால் அலுவலகம், அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், தி.நகர் தலைமை அஞ்சலகம், மயிலாப்பூர் தலைமை அஞ்சலகம், பரங்கிமலை தலைமை அஞ்சலகம், பூங்கா நகர் தலைமை அஞ்சலகம், அசோக் நகர் உள்ளிட்ட 10 அஞ்சலகங்களில் ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 515 அஞ்சலகங்களில் படிப்படியாக இந்த வசதி விரிவுபடுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications