நிர்வாண “வாக்”...குதித்து குதித்து “டான்ஸ்”- நாமக்கல்லில் கைதான "குஜால்" சாமியார்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சாமியார் ஒருவர் தெருவில் இறங்கி நிர்வாணமாக வலம் வந்ததால் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த, பொத்தனூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர் வேலூரில் கைரேகை மற்றும் ஜாதகம் பார்த்து வருகிறார். மனைவியை பிரிந்து தனியாக வசிக்கிறார்.

கடந்த சில நாட்களாக அவர் வீட்டில் இரவு நேரத்தில் சத்தமாக பக்தி பாடல் பாடுவது, வீட்டுக்குள்ளே குதித்து, குதித்து ஆடுவது, சுவரை எட்டி உதைப்பது, நிர்வாணமாக கண்களை மூடி தியானம் செய்து கொண்டே வீட்டின் முன் நடந்து வருவது போன்ற ஒழுங்கீன வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதைப் பார்த்த பக்கத்து வீடுகளில் வசிக்கும் பெண்கள் கொதிப்படைந்தனர். சித்தர் என கூறிக்கொண்டு நிர்வாண பூஜை செய்யும் வெங்கடாசலம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேலூர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் நிர்வாண சாமியாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.












Click it and Unblock the Notifications