For Daily Alerts
Just In
விருத்தாசலத்தில் ஈவ்டீசிங் தொல்லை.... செவிலியர் புஷ்பா தற்கொலை
கடலூர்: விருத்தாசலத்தில் இளைஞர்கள் ஈவ்டீசிங் செய்ததால் செவிலியர் புஷ்பா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 1998-ம் ஆண்டு சரிகா ஷா என்ற மாணவி ஆட்டோவில் வந்த இளைஞர் கும்பல் ஒன்று ஈவ் டீசிங் செய்ததில் கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவதைத் தொடர்ந்து ஈவ்டீசிங் செய்வோருக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன.
ஆனாலும் ஈவ் டீசிங் தற்போது ஒருதலைக் காதல் கொலைகளாக விஸ்வரூபமெடுத்துள்ளது. இந்த நிலையில் விருத்தாசலத்தில் செவிலியர் புஷ்பா, ஈவ்டீசிங் செய்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவிலியர் புஷ்பாவை கிண்டல் செய்து தற்கொலைக்குக் காரணமாக இருந்த இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புஷ்பாவின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Comments
English summary
Frustrated of continuous eve-teasing by two youths Nurse committed suicide in Virudhachalam.
Story first published: Friday, September 9, 2016, 10:58 [IST]