நர்ஸ் கையைப் பிடித்து இழுத்து அத்துமீறல்... ஆரம்ப சுகாதார மைய ஊழியர் கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய நர்சை அலுவலகத்தில் வைத்து பலத்காரம் செய்ய முயன்ற அலுவலர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை அருகே உள்ள வீரவநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி அம்பிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பத்தமடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் அவர் திருவாரூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Nurse molested in govt office

இந்நிலையில் அம்பிகா, சான்றிதழ் ஒன்று வாங்குவதற்காக பத்தமடை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அலுவலராக பணியாற்றி வரும் சேரன்மகாதேவி வைத்தி மேல தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், அம்பிகாவின் கையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தினாராம்.

இதனை சற்றும் எதிர்பாராத அம்பிகா, அவரிடம் இருந்து திமிறியுள்ளார். மேலும் கூச்சல் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் இவரது சத்தம் கேட்டு ஆரம்ப சுகாதார வாளகத்தில் குவியவே சுரேஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

உடனடியாக இது குறித்து பத்தமடை போலீஸ் நிலையத்தில் அம்பிகாவின் கணவர் பாலகிருஷ்ணன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தனர். பட்டபகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+