Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜினாமா பரபரப்பு.... ஓபிஎஸ் போலவே உம்மனா மூஞ்சியாகவே இருந்த தேனிமாவட்டம்

முதல்வர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தபோதும் அவரது சொந்த மாவட்டம் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் அமைதியாகவே இருந்தது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஓ. பன்னீர்செல்வத்தின் தேனி மாவட்டம் எந்த ஒரு ரியாக்ஷனையும் காட்டாமல் இயல்பு வாழ்க்கையில் மூழ்கிக் கிடந்தது.

சசிகலாவுக்காக முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம். இதையடுத்து ஓ. பன்னீர்செல்வத்தின் தேனி மாவட்டத்தில் பதற்றம் நிலவுவதாக வதந்திகள் பரவின.

இயல்பு வாழ்க்கை

இயல்பு வாழ்க்கை

ஆனால் தேனி மாவட்டத்தின் பல பகுதிகள் இந்த மாற்றம் தொடர்பாக எந்த ஒரு ரியாக்ஷனையும் காட்டாமல் இயல்பாகவே இருந்தது. கூடலூர், கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், தேனி பகுதிகளில் வழக்கம்போல இயல்பு வாழ்க்கை இருந்தது.

டீ கடையில்...

டீ கடையில்...

ஓ. பன்னீர்செல்வத்தின் பெரியகுளத்தில் மட்டும் அதிமுக கரைவேட்டி நபர்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அதேநேரத்தில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான டீ கடையில் எந்த ஒரு டென்சனுமே இல்லாமல் விறுவிறுப்பாக வியாபாரம் 'ஆவிபறக்க' நடந்து கொண்டிருந்தது.

அதிருப்தி

அதிருப்தி

இருந்தபோதும் ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதில் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்த அதிருப்தியை எப்படி எந்த வகையில் வெளிப்படுத்துவது என்பது தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

வெளியே காட்டுவோம்

வெளியே காட்டுவோம்

நிச்சயம் உள்ளாட்சி தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த கூடும். குறிப்பாக சசிகலா போட்டியிடும் தொகுதியில் அவரை தோற்கடிக்கும் உள்ளடி வேலைகளில் இறங்குவோம் என்கின்றனர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+