அதெப்படி அரசியலைவிட்டு ஒதுங்க விடுவோம்? ஓபிஎஸ்க்கு தடா போட்ட மன்னார்குடி கோஷ்டி!
அரசியலை விட்டு ஒதுங்க நினைக்கும் பன்னீர்செல்வத்துக்கு மன்னார்குடி கோஷ்டி தடை போட்டிருக்கிறதாம். சசிகலா முதல்வரானாலும் அப்போதும் அமைச்சரவையில் 2-வது இடம் தருவோம் என உறுதியளித்துள்ளனராம்.
சென்னை: கடும் நெருக்கடிகளால் அரசியலை விட்டு போய்விட நினைத்த முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மன்னார்குடி கோஷ்டி தடை போட்டிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைந்து 1 மாதம்தான் ஆகிறது. இந்த ஒரு மாதமாக மன்னார்குடி கோஷ்டியிடம் படாதபாடு பட்டு கொண்டிருக்கிறார் முதல்வர் ஓபிஎஸ்.

மத்திய அரசின் தயவில் முதல்வர் பதவியை ஓபிஎஸ் ஏற்றதை தாங்கிக் கொள்ள முடியவில்லை மன்னார்குடி கோஷ்டி. அவர் பதவி ஏற்றது முதலே குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறது அந்த கோஷ்டி.
இதனிடையே அதிமுகவின் பொதுச்செயலர் பதவியை கைப்பற்றிவிட்டார் சசிகலா. அவ்வளவுதான் எவ்வளவு வேகமாக முதல்வர் பதவியை கைப்பற்றிவிட முடியுமோ அவ்வளவு விரைவாக காய்களை நகர்த்துகிறார்கள்.
இதற்காக பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து ராஜினாமா கடிதத்தையும் வாங்கி வைத்துவிட்டது போயஸ் கார்டன். இதில் வெறுத்து போன ஓபிஎஸ் அரசியலைவிட்டே போய்விடலாம் என்கிற முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் மன்னார்குடி கோஷ்டியோ, அப்படியெல்லாம் பன்னீர்செல்வத்தை எளிதில் விட்டால் எதிர்க்கட்சிகள் வளைத்துப் போட்டு உண்மையை சொல்ல வைத்துவிட்டால் எல்லாமும் சூன்யமாகிவிடும் என அதிர்ந்து போனதாம். இதனால் நீங்கள் அரசியலைவிட்டு போக வேண்டாம்; எப்போதும் போல அமைச்சரவையில் 2-ம் இடத்தில் இருக்கலாம் என வாக்குறுதி கொடுத்தி சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறதாம்.
எங்கிட்டுதான் போவதோ? என ஏகத்துக்கும் டென்சனில் இருக்கிறதாம் ஓபிஎஸ் தரப்பு.
-
சசிகலா ஆவடி ஆட்டம் ஆரம்பம்.. சின்னம்மா மெகா ஸ்கெட்ச்! தென்மாவட்டம் இருக்க, சென்னை ஏன்? யாருக்கு செக் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications