ஜெ. மரணம் பற்றி சி.பி.ஐ விசாரணை.. ஜனாதிபதியுடன் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பிக்கள் இன்று சந்திப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி இன்று ராஜ்யசபா எம்.பி, மைத்ரேயன் தலைமையில் அதிமுகவின், ஓ.பி.எஸ். அணி எம்.பி.க்கள் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியை சந்திக்கின்றனர்.
சென்னை: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பிக்கள் சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரி கோரிக்கைவிடுக்க உள்ளனர்.
தமிழக அரசியல் தற்போது டெல்லிக்கு நகர்ந்துள்ளது. அண்மையில்தான் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடைபெற்ற அமளி குறித்து புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி இன்று ராஜ்யசபா எம்.பி, மைத்ரேயன் தலைமையில் அதிமுகவின், ஓ.பி.எஸ். அணி எம்.பி.க்கள் ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியை சந்திக்கின்றனர்.
தற்போது ஜெயலலிதாவின் மரண விவகாரம், அரசியல் காய் நகர்த்தலுக்கு பயன்படுத்தப்பட்டுவருகிறது. நீதி விசாரணை கோரிக்கைகளும் வலுப்பெற்றுள்ளன. இதுகுறித்தெல்லாம், ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications