Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல்லு இல்லாட்டியும் பரவாயில்லை... பான் கார்டு இருக்கணும் பாட்டி- "ஓ.ஏ.பி" வாங்கும் முதியோர் நிலை இது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் வசித்து வரும் அந்தப் பாட்டி முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வருகிறார்.

கணவர் இறந்த பிறகு அடைக்கலம் தேட பிள்ளைகள் இல்லாத நிலையில் அவருக்கு சோறு போட்டுக் கொண்டிருப்பது அந்த முதியோர் இல்லமும், அரசு வழங்கி வருகின்ற ஓ.ஏ.பி எனப்படும் முதியோர் உதவித் தொகையும்தான்.

வருகின்ற 1000 ரூபாயில்தான் அவருடைய ஒரு மாதக் கஞ்சியும், மற்ற செலவுகளும் ஓடிக் கொண்டிருக்கின்றது. அதற்கும் வந்தது ஒரு பிரச்சினை.

முதலில் ஏற்கனவே இருந்த முகவரி மாற்றத்திற்காக ஓ.எ.பி பென்சன் கட் ஆனது. மீண்டும் யார் யாரிடமோ கெஞ்சி மீண்டும் அப்ளை செய்து வங்கியில் கணக்கு ஆரம்பிக்கச் சென்றவருக்கு அங்கும் காத்திருந்தது ஒரு பெரிய அதிர்ச்சி.

நம்பர் இருந்தா உள்ள வா:

நம்பர் இருந்தா உள்ள வா:

"பாட்டி அக்கவுண்ட் ஆரம்பிக்கணும்னா பான் கார்டு நம்பர் கண்டிப்பா வேணும்..போய் ஆரம்பிச்சுட்டு வா" என்றிருக்கின்றார் அந்த "கடமை" தவறதா ஊழியர்.

வந்தாதான் உனக்கு சோறு:

வந்தாதான் உனக்கு சோறு:

"நான் என்னத்தப்பா பான் கார்டெல்லாம் கண்டேன்" என்ற பாட்டியிடம் "அதெல்லாம் தெரியாது பான் கார்டு நம்பரோட வந்தாதான் அக்கவுண்ட்" என்றிருக்கிறார் அவர். அந்த பாட்டி பாவம் கிடைத்த மாச வருமானமும் போய் தவிப்பில் இருக்கிறார்.

கதறும் முதியவர்கள்:

கதறும் முதியவர்கள்:

இது யாரோ ஒருவரின் நிலை கிடையாது. காலம் போன கடைசியில் கஞ்சிக்கு வழியின்றி தெருவில் நிற்கும் முக்கால்வாசி முதியோரின் நிலை இன்று இதுதான்.

போவதே இல்லை:

போவதே இல்லை:

இன்னும் பலருக்கு "ஓ.ஏ.பி" என்றாலே என்னவென்று தெரிவதில்லை பாவம். இதில் சில இடங்களில் ஓ.ஏ.பி ஒழுங்காக முதியோருக்கு சென்றடைவதுமில்லை.

ஓ.ஏ.பி என்றால் என்ன?

ஓ.ஏ.பி என்றால் என்ன?

கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.அறுபது வயதிற்கு மேற்பட்ட மக்கள் மற்றும் எவாின் ஆதரவுமின்றி வாழும் முதியோர்களுக்கு மாதம் ரூபாய் 1000 வீதம் வழங்கப்படுகிறது.

ஈசியாக கிடைக்காது:

ஈசியாக கிடைக்காது:

ஆனால், இதைப் பெறுவதற்கான விதிமுறைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. இதில் பலருக்கும் அந்த முதியவர்கள் படியளக்க வேண்டும். அப்போதுதான் அந்த 1000 ரூபாய் பணம் கிடைக்கும்.

கிடைப்பது குதிரைக் கொம்பு:

கிடைப்பது குதிரைக் கொம்பு:

இதில், லட்ச லட்சமாய் பணம் போடுபவர்களின் கால்களில் விழுந்து, ஜூஸ் வாங்கிக் கொடுத்து உபசரிக்கும் வங்கிகள், இது போன்ற ஏழைகளிடம் காட்டுவதோ பாராமுகம்தான்.

என்னயா உங்க நீதி?:

என்னயா உங்க நீதி?:

வெறும் 1000 ரூபாய் பணத்திற்கு நாயாய், பேயாய் அலைந்தால் பாவம் கடைசியாய் பான் கார்டு அந்தக் கார்டு இந்தக் கார்டு என்று ஒரு வேளை சோற்றுக்கும் ஆப்பு வைக்கும் இந்த டப்பா சட்டத் திருத்தங்கள் மாறினால் மட்டுமே நாடு வல்லரசாகும். இதில் ஆளும் மத்திய அரசினர் வேறு அடித்தட்டு வர்க்கத்தினர் அனைவருக்கும் அக்கவுண்ட் என்று கொஞ்ச நாள் கூவிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பால் கார்டுக்கே வழியில்லாதவர்களிடமும் பான் கார்டு இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய அரசின் வளர்ச்சியாம் என்னவோ போங்கப்பா...!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+