கிருஷ்ணகிரி அருகே மாடுகளைத் தாக்க வந்த சிறுத்தையை வெட்டிக் கொன்ற விவசாயி
கிருஷ்ணகிரி அருகே தனது மாடுகளைத் தாக்க வந்த சிறுத்தையை விவசாயி ஒருவர் வெட்டிக்கொன்றுள்ளார்.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே தான் வளர்த்து வந்த மாடுகளைத் தாக்க வந்த சிறுத்தையை விவசாயி ஒருவர் வெட்டிக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே மகாராஜகடை கிராமத்தில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. 62 வயதான அவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 8 கறவை மாடுகள் வளர்த்து வருகிறார்.

இப்பகுதியில் காட்டுவிலங்குகள் நடமாட்டம் அதிகம். இதனால் அப்பகுதி மக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு பாதுகாப்பாய் காவல் இருப்பது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் விவசாயி ராமமூர்த்தி, தனது மாடுகளிடத்தில் பால் கறப்பதற்காக வந்துள்ளார். அப்போது, காட்டுப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்றை மாடுகளை தாக்க வந்தது.
இதனைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி, சிறுத்தையை விரட்ட முயற்சி செய்துள்ளார். ஆனால், சிறுத்தை ராமமூர்த்தியை தாக்க வந்துள்ளது. இதனால், தோட்டத்தில் இருந்த அரிவாளை எடுத்து, புலியை தாக்கி உள்ளார் ராமமூர்த்தி.
இதனால் வெட்டுப்பட்ட சிறுத்தை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்தத் தகவலை அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications