அரசிடம் கையேந்தாமல் மக்கள் தாங்களே சுயமாய் கட்டிய தடுப்பணை
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சக்கரசெட்டியப்பட்டி பகுதியில் சேர்வராயன் மலை தொடரின் மேற்கு சரபங்கா நதி உருவாகின்றது.
சாரங்கா நதியானது உருவாகும் இடத்தில் வனப் பகுதியில் தண்ணீர் தேங்காமல் 10 கிலோ மீட்டர் ஆற்றில் பயணித்து காமலாபுரம் ஏரியில் கலப்பதால் வனத்தை ஒட்டியுள்ள பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளாக வறட்சியால் வாடி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயத்திற்கு மட்டுமல்ல குடிநீர் இன்றி தவித்தனர்.
சேர்வராயன் மலைப் பகுதியை ஒட்டியுள்ள பன்னிகரடு பகுதியில் வனப் பகுதியில் அணைகட்ட வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது கடந்த 3 ஆண்டுகளாக வறட்சி அதிகமாகியுள்ளது.
வேறு வழியின்றி வறட்சியின் பிடியில் இருந்து மீள வனத் துறையும் பொதுமக்களும் சேர்ந்து குழு அமைத்து ஆலோசனை செய்து தாங்களே அணையை கட்ட வேண்டும் என முடிவு செய்து வனத்துறையிடம் அனுமதி பெற்றனர். இதில் வனத்துறை சார்பாக நபார்டு வங்கி நிதி உதவியில் ரூ 6 லட்சம் ரூபாய் ஒதுக்கி கொடுத்தது.
இதில் 9 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட வேலை தற்போது 15 லட்சத்தை தாண்டி வேலை நடைபெற்று வருவதாக விவசாயிகள் கூறினர்.
அருகில் இருக்கும் விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் நன்கொடை வசூலித்து இந்த சிறிய அணை கட்டி வருகின்றனர்.
பணம் மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் விவசாயிகள் வீட்டிற்கு ஒரு மனிதர் என்ற அடிப்படையில் மனித உழைப்பு மற்றும் அவர்களிடம் உள்ள டிராக்டர் கிராம மக்களிடம் உள்ள எந்திரங்களை வைத்து பணியை செய்து வருகின்றனர்.
இனி வரும் காலங்களில் மழை நீரை சேமித்து தங்கள் பகுதி வறட்சி இல்லாத பகுதியாக உருவாக்கி உள்ளதாக கூறியுள்ளனர். தண்ணீர் இன்றி தவித்த மக்கள் தாங்களாகவே உருவாக்கியுள்ள இந்த சிறிய வகை அணையை மற்ற ஊர் பொதுமக்களும் பார்த்து செல்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications