தமிழகத்தில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.5 வரை உயர்வு
தனியார் பால் நிறுவனங்களின் விலையேற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஹோட்டல், கேன்டீன்களில் டீ, காபி விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.
சென்னை: டோட்லா, ஜெர்சி ஆகிய தனியார் பால் நிறுவனங்கள் இன்று நள்ளிரவு முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தவுள்ளன. இதனால் ஹோட்டல், கேன்டீன்களில் டீ, காபி விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.
ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு டோட்லா, திருமலா, ஹெரிட்டேஜ், ஜெர்சி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் இன்று நள்ளிரவு முதல் பால் விலையை உயர்த்தப் போவதாக பால் முகவர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
அத்தியாவசிய உணவான பால் தேவையை சமாளிப்பதில் தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு அதிகம் உள்ளது. அரசு நிறுவனமான ஆவின் தினசரி சுமார் 15 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்கிறது. மாநிலத்தின் வணிக பயன்பாட்டில் 85 சதவீதம் தனியார் பால் தான் பயன்படுத்தப்படுகிறது.

எவ்வளவு உயர்வு?
திருமலா, டோட்லா, ஜெர்சி, ஹெரிடேஜ் ஆகிய 4 தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்நிறுவனங்களின் பால் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 1 லிட்டர் பாக்கெட்டின் விலை ரூ.2, அரை லிட்டர் பாக்கெட்டின் விலை ரூ.1 ஆக அதிகரிக்க உள்ளது.

உயர்வுக்கு பின்...
டோட்லா, ஜெர்சி ஆகிய பால் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. திருமலா, ஹெரிடேஜ் ஆகிய பால் விலை நாளை (6-ஆம்தி தேதி) நள்ளிரவு முதல் விலை உயர்கிறது. தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படுகிறது. ஒரு லிட்டர் தயிர் ரூ.50-ல் இருந்து 55 ஆகவும், 200 மில்லி பாக்கெட் ரூ.10-ல் இருந்து 11 ஆகவும் உயர்கிறது.

கண்டனம்
ஆவின் பாலை விட தனியார் பால் லிட்டருக்கு ரூ.8 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அசுர விலையேற்றத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தினர் அனைத்து தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

போராட்டம்
இதுகுறித்து நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அவசர சட்டமுன் வடிவை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். தங்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காவிட்டால், அனைத்து கட்சித் தலைவர்களை சந்தித்து தமிழகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

டீ, காபி விலை உயருகிறது
தனியார் பால் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் அதனை நம்பி இயங்கி வரும் ஹோட்டல்கள், கேன்டீன்களில் காபி மற்றும் டீ விலை கடுமையாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்களும், நடுத்தர மக்களும் பாதிக்கப்படுவர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications