காவிரிக்காக ஏப்ரல் 3ம் தேதி தமிழகத்தில் முழு கடையடைப்பு: வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 3ம் தேதி தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது.
வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமசிங்கராஜா சென்னையில் இன்று அளித்த பேட்டி:
மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, பாமக சார்பில் வரும் ஏப்ரல் 11ம் தேதி கடையடைப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அதற்கு எங்கள் தார்மீக ஆதரவு உண்டு. ஆனால், வியாபாரிகளுக்கு இடர்பாடுகள் ஏற்பட்டுவிடாமல் இருக்க ஒரே போராட்டம் என்ற அளவில் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

கர்நாடகாவில் ஒரே குடையின்கீழ் போராடுகிறார்கள். அதேபோல தமிழகத்தில் அனைத்து அமைப்புகளும் இணைந்து எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்.
ஏப்ரல் 3ம் தேதி தமிழகம் முழுக்க கடையடைப்பு நடத்த வணிகர் சங்க பேரமைப்பு அழைப்புவிடுத்துள்ளது. அன்று நடைபெறும் கடையடைப்பன்று அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு தடை ஏற்படாது. பத்திரிகை, பால் ஆகியவற்றை காலை நேரத்தில், கடையை மூடி வெளியே வைத்து விற்பார்கள். மற்ற பொருட்கள் விற்பனை கிடையாது.
ஏப்ரல் 1 அல்லது 2ம் தேதி மக்கள் முன்கூட்டியே பொருட்களை மக்கள்வாங்கி வைத்துக்கொண்டு, எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.
மத்திய அரசே நீதிமன்ற உத்தரவை மீறுகிறதே நாம் ஏன் மீறக்கூடாது என்ற எண்ணம் வந்துவிட கூடாது என்பதற்காக எங்கள் போராட்டத்திற்கு அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை.. விஜய்க்கு பெரிய சவால் -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications