சென்னையில் ஒரு நாள் தமிழ் இணையப் பயிலரங்கு.. மாணவர்களே வாருங்கள்!
சென்னை: சென்னையில் ஒரு நாள் தமிழ் இணையப் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.
சென்னைப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் (IDE) கணினி அறிவியல்துறையும், தமிழ்த்துறையும் இணைந்து ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கினை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடத்துகின்றன. ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
நாள்: 17.11. 2013 (ஞாயிறு) நேரம்: காலை 10.30 மணி முதல்
இடம்: கருத்தரங்க அறை, இரண்டாம் தளம், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம்.
முனைவர் ஜி. கோடீசுவர பிரசாத், (பதிவாளர், சென்னைப் பல்கலைக்கழகம்),
முனைவர் எம். இரவிச்சந்திரன், (இயக்குநர், தொலைநிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்குவார்கள்.
புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் பயற்சி அளிப்பார்.
நிகழச்சி ஒருங்கிணைப்பாளர்களாக, முனைவர் ஒப்பிலா. மதிவாணன் (தமிழ்த்துறை), முனைவர் சசிகலா (கணினித்துறை) ஆகியோர் செயல்படுவர்.
செய்தி - முனைவர் மு. இளங்கோவன்