Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சியில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: டிரைவர் பலி -14 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி அருகே முசிறியில் அரசுப்பேருந்துகள் நேர் நேர் மோதிய விபத்தில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்., 14 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பெங்களுரிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்தும், சென்னையிலிருந்து திருச்சி வழியாக முசிறி சென்ற அரசு பேருந்தும் முசிறி சுடுகாட்டு துறை என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

One dead 14 injured bus accident near Trichy

இந்த பயங்கர விபத்தில் சென்னையிலிருந்து முசிறி நோக்கி வந்த அரசு பேருந்து ஒட்டுநர் சுதாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து முசிறி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முசிறி அருகே அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அந்த பகுதியை விபத்து பகுதியாக அறிவித்து டிரைவர்களிடம் மிதவேகத்தில் செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+