தஞ்சை: திருமண மண்டபம் கான்கிரீட் போடும் போது விபத்து: ஒருவர் பலி – 7 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அருகே புதிதாகக் கட்டப்பட்டு வந்த திருமண மண்டபம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை அடுத்து திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இதில், முதல் கூரை கான்கிரீட் ஒட்டும்போது அந்தப் பணியில் 40 பேர் வரை ஈடுபட்டிருந்தனர்.

One dead 7 injured in building collaps in Tanjur

பணி இன்று காலை தொடங்கும் போது, திடீரென பக்கவாட்டுச் சுவர் சரிந்தது. இதில், மேல் சாரம் பிடிமானம் இன்றி சரிந்து விழுந்தது. இதனால் அனைவரும் எதிர்த்திசையில் ஓடி தப்பித்தனர்.

இதில், 6 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் ராஜா என்ற தொழிலாளி உயிரிழந்தார்.

இது குறித்து தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+