பேட்டியளித்த ஜார்ஜ்.. அவசரமாக முதல்வரை சந்தித்த விஜயபாஸ்கர்.. அரை மணி நேரத்தில் நடந்த அல்லோகலம்
முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய அதே நேரத்தில், அமைச்சர் விஜயகுமார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.
Recommended Video

சென்னை: முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய அதே நேரத்தில், அமைச்சர் விஜயகுமார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. விஜயபாஸ்கர் பதவி விலகி போகிறாரா என்றும் சந்தேகம் இதனால் எழுந்துள்ளது.
குட்கா ஊழல் தொடர்பாக இரண்டு நாள் முன் தமிழகத்தில் சிபிஐ திடீர் என்று ரெய்டு நடத்தியது. குட்கா விவகாரம் வெடித்துள்ள நிலையில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

தகவல் வந்தது எப்போது
முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மதியம் 2.30 மணிக்கு நேற்று பேட்டியளித்தார். இதற்காக செய்தியாளர்கள் முன்பே தயாராக இருந்தனர். நிறைய கேள்விகளும் தயாரிக்கப்பட்டு இருந்தது. அவர் அரசுக்கு எதிராக புகார் வைக்க போகிறார் என்று எல்லோருக்கும் தெரிந்தது. இந்த தகவல் 1.35 மணிக்கே செய்திகளிலும் வந்துவிட்டது.

வேகவேகமாக சென்றார்
இந்த நிலையில்தான் மதியம் 1.50க்கு எல்லாம், அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் பழனிசாமியை சந்திக்க சென்று இருக்கிறார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வசிக்கிறார். அதே பகுதியில்தான் முதல்வரும் வசிக்கிறார். இதனால் வேகவேகமாக காரில் சென்ற விஜயபாஸ்கர் , எடப்பாடி பழனிசாமியை 2 மணிக்கு சந்தித்துள்ளார்.

மிகவும் தனியாக பேசினார்கள்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த சந்திப்பு நடந்த போது அந்த அறையில் யாருமே இல்லை. முதல்வரின் பிஏ கூட அறையில் இல்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு மிகவும் ரகசியமான விஷயங்களை விஜயபாஸ்கர், முதல்வரிடம் தெரிவித்துள்ளார் என்று கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் என்ன பேசினார்கள் என்று கூறப்படவில்லை.

ஜார்ஜ் பற்றியும் சில கூடுதல் தகவல்கள்
அதேசமயம் ஜார்ஜ் பேட்டி அளிக்க இருந்ததுதான் இந்த அவசர சந்திப்பிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஜார்ஜ் தன்னுடைய பேட்டியில் அரசு மீது நேரடியாக குற்றச்சாட்டு வைத்த அளவிற்கு விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு வைக்கவில்லை. ஆனாலும், ஜார்ஜ் பேட்டியை தொடர்ந்து சிபிஐ விசாரணை முடுக்கப்படும், இதனால் விஜயபாஸ்கர் பதவி விலகும் நிலை ஏற்படலாம் என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications