கட்சி பதவி விவகாரம்: தினகரனுக்கு வலுக்கும் எதிர்ப்பு- பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமுவும் போர்க்கொடி
தினகரன் நியமித்த கட்சி பதவியை ஏற்க முடியாது என பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு அறிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக அம்மா அணியின் மருத்துவ அணி இணைச் செயலராக தம்மை தினகரன் நியமித்ததை ஏற்கப் போவதில்லை என பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமுவும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
திடீரென தீவிர அரசியலுக்கு திரும்பிய தினகரன், அதிமுக அம்மா கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். ஆனால் இந்த நியமனங்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

எம்.எல்.ஏக்கள் ஏ.கே. போஸ், சத்யா பன்னீர்செல்வம், காட்டுமன்னார்கோவில் முருகுமாறன் ஆகியோர் தினகரனால் நியமிக்கப்பட்ட பதவிகள் தங்களுக்கு தேவையில்லை என போர்க்கொடி தூக்கியிருந்தனர். இதனிடையே பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு தம்மை மருத்துவ அணி இணை செயலராக நியமித்ததை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.
மேலும் தாம் எம்.எல்.ஏ.வாக இருந்து பணி செய்தாலே போதும்; தினகரனின் கட்சியை கைப்பற்றும் முயற்சிக்கு துணை போக முடியாது எனவும் கதிர்காமு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications