கூட்ட நெரிசல் எதிரொலி.. மெட்ரோ ரயில் இன்று முதல் கூடுதல் நேரம் இயக்கப்படும்!
சென்னையில் இன்று முதல் மெட்ரோ கூடுதல் நேரம் இயக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இன்று முதல் மெட்ரோ கூடுதல் நேரம் இயக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சென்னையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மெட்ரோ பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். பலர் தினசரி மெட்ரோ மூலம் அலுவலகம், கல்லூரி செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

இதனால் சமயங்களில் அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது.
அதன்படி இன்று முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனக்கூறப்பட்டு இருக்கிறது. கூட்ட நெரிசல் அதிகரிக்கும் நேரங்களில் மேலும் கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications