எடப்பாடிக்கு ஆப்பு ரெடி... சசிகலாவின் "பிளான்" பற்றி அன்றே சொன்னது ஒன் இந்தியா!
எடப்பாடிக்கு எதிராக சசிகலா புதிய கோஷ்டியை உருவாக்கப் போவதாக ஒன் இந்தியா தமிழ் வெளியிட்ட செய்தி இப்போது உறுதியாகி உள்ளது.
சென்னை: பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் எடப்பாடி அரசுக்கு பாடம் புகட்டுவேன் என பெங்களூரு சிறையில் சசிகலா சபதம் எடுத்திருப்பதாக அண்மையில் ஒன் இந்தியா தமிழ் இணையதளம் சுட்டிக்காட்டியிருந்தது. இப்போது நாம் தெரிவித்ததுபோலவே எடப்பாடி அரசுக்கு சிக்கலை கொடுக்கும் வகையில் தினகரன் கோஷ்டி உதயமாகிவிட்டது.
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்ப போகிறார் என முதலில் பதிவு செய்தது ஒன் இந்தியா தமிழ்தான். நாம் செய்தி வெளியிட்ட அன்று இரவுதான் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்து போர்க்கொடி தூக்கினார் ஓபிஎஸ்.

இதேபோல் சசிகலா, தினகரன் மற்றும் திவாகரன் தொடர்பான நகர்வுகளை நாம் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். அப்பல்லோவில் ஜெயலலிதாவும் சசிகலாவும் பேசும் வீடியோ இருப்பதாக திவாகரன் மகன் ஜெயானந்த் வெளியிட்ட பேஸ்புக் பதிவை நாம்தான் செய்தியாக வெளியிட்டோம். அதன் பின்னர் நாட்டின் அனைத்து ஊடகங்களும் அதை வெளியிட்டன.
தற்போது பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் எடப்பாடிக்கு பாடம் புகட்டுவேன் என சசிகலா சிறையில் சபதம் எடுத்திருப்பதாகவும் புதிய கோஷ்டி விரைவில் உருவாகலாம் எனவும் பதிவு செய்திருந்தோம். நாம் பதிவு செய்தபடியே இப்போது தினகரன் தலைமையில் புதிய கோஷ்டி முளைத்துள்ளது.












Click it and Unblock the Notifications