எடப்பாடிக்கு ஆப்பு ரெடி.. சிறைவாசி சசிகலா ஆசியுடன் உதயமாகுது இன்னொரு கோஷ்டி!
டெல்லியை முழு வீச்சில் ஆதரிக்கும் எடப்பாடி அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: அரசியலில் இருந்து தம்மை ஓரங்கட்டிவிட்டு பாஜக ஆசியுடன் ஆட்சி நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தக்க பாடம் புகட்டுவேன் என பெங்களூரு சிறையில் சசிகலா கொதித்துபோய் சூளுரைத்தாராம்.
இந்திய அரசியல் வரலாற்றில் அதிமுகவைப் போல விசித்திரமான காட்சிகள் அரங்கேறும் கட்சி எதுவும் இல்லை. அக்கட்சியின் பொதுச்செயலராக கூறப்படும் சசிகலா, துணைப் பொதுச்செயலரான தினகரன் இருவரும் சிறையில் உள்ளனர்.

காவடி தூக்குவதா?
இந்த இருவரைப் பற்றியும் எந்த கவலையும் இல்லாமல் மத்தியில் ஆளும் பாஜகவை திருப்திபடுத்தும் வகையில் அதே அதிமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுகவின் அத்தனை கோஷ்டிகளுமே டெல்லிக்கு காவடி தூக்குவதில் மும்முரமாக இருக்கின்றன.

கொந்தளித்த சசி
இத்தகவல்களை பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதை கேட்டு கொந்தளித்து போய்விட்டாராம் சசிகலா.

ஆட்சியை கவிழ்ப்பேன்
தம்முடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை வெளியே வாங்கன்னு சொன்னா போதும்.. அடுத்த நிமிசமே எடப்பாடி அரசு கவிழ்ந்து போய்விடும்... இதை எல்லாம் புரியாமலா ஆடுகிறார்கள் என சிறையில் சீறியிருக்கிறார் சசிகலா. எல்லா விஷயத்திலும் அடிமைபோல டெல்லியிடம் நடந்து கொள்வதை சகிக்க முடியவில்லை எனவும் கூறியிருக்கிறார் சசிகலா.

புதிய கோஷ்டி?
இந்த ஆட்டங்களுக்கு நிச்சயம் முடிவு கட்டுவேன் என பெங்களூரு சிறையிலும் சபதம் போட்டிருக்கிறாராம் சசிகலா. அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமையில் புதிய கோஷ்டி முளைத்தாலும் ஆச்சரியமில்லை என்கின்றன மன்னார்குடி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications