தொடரும் கட்சி தாவல்... தேமுதிக திருப்பூர் தெற்கு மா.செ. கீர்த்தி சுப்பிரமணியம் திமுகவில் ஐக்கியம்!
விழுப்புரம்: தேமுதிகவின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் கீர்த்தி சுப்பிரமணியம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார்.
மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது முதலே அக்கட்சியில் கலகக் குரல் வெடித்து வருகிறது. தேமுதிகவின் 3 எம்.எல்.ஏ.க்கள், சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிக என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிவிட்டனர்.
திமுக கூட்டணியில் சந்திரகுமாரின் மக்கள் தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் தேமுதிகவின் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து திமுகவில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேல்மருவத்தூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேமுதிகவின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலர் கீர்த்தி சுப்ரமணியம் இன்று திமுகவில் இணைந்தார். பல்லடசம் சட்டசபை தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்கியதில் அதிருப்தி அடைந்து தாம் தேமுதிகவை விட்டு வெளியேறி திமுகவில் இணைந்ததாக கீர்த்தி சுப்ரமணிய