4 மாவட்டங்களில் கெய்ல், ஓஎன்ஜிசி பணிகளைத் தொடர பசுமைத் தீர்ப்பாயம் தடை

Subscribe to Oneindia Tamil

புதுகை: நாகை, திருவாரூர், தஞ்சாவூரில் ஓஎன்ஜிசி மற்றும் கெய்ல் நிறுவனங்கள் பணிகளைத் தொடர வரும் 10 ஆம் தேதி வரை தடை விதித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விவசாய நிலங்களில் இருந்து மீத்தேன், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு எடுப்பதற்கு பூர்வாங்க பணிகளைத் தொடர இரு நிறுவனங்களுக்கும் தடை விதித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ONGC, GEECL works stopped till 10th this month

மேலும், இது குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் இரு நிறுவனங்களும் பதிலளிக்கவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தொடர்ந்த வழக்கில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகள் நடைபெற்றால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கருத்துக் கேட்புக் கூட்டங்களை முறையாக நடத்தாமல் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டதாக மனுதாரர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கில் தீர்ப்பாயத்திற்கு உதவுவதற்காக வைகோவை நியமித்தது பசுமை தீர்ப்பாயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+