காவிரி டெல்டாவில் இருந்து உடனடியாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும்: வைகோ
காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து உடனடியாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : காவிரி டெல்டா பகுதியில் இருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனைத்து திட்டங்களையும் கைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
மேலும், காவிரி டெல்டா பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து அனைத்து திட்டங்களையும் கைவிட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வேளாண் சிறப்பு மண்டலம்
டெல்டா மாவட்டங்களை வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் ஒரு கிணறுக்கு கூட ஓ.என்.ஜி.சி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெறவில்லை என்பதை குறிப்பிட்ட வைகோ, விரைவில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை விட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பச்சை துரோகம் செய்த அரசு
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றுவதற்கான பணிகளைச் செய்யவில்லை. காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்துக்கு பச்சை துரோகத்தை மோடி அரசு செய்துள்ளது. காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக தமிழக அனைத்து கட்சி தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக தேர்தல்
தொடர்ந்து தமிழகத்தை அனைத்து விதங்களிலும் மத்திய அரசு புறக்கணிப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுத்துள்ள முடிவின்படி, பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் தமிழக முதல்வருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்து மோடி செயல்பட்டு வருவது சரியல்ல என்று வைகோ குறிப்பிட்டார்.

அடுத்தகட்ட போராட்டம்
மதிமுகவின் பொதுக்குழு வருகிற 6ம் தேதி ஈரோட்டில் கூடுகிறது. உயர்நிலை குழு கூட்டமும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் கூடுகிறது. அதில் பிரதமர் மோடி தமிழகத்தை தொடர்ந்து உதாசீனப்படுத்துவது குறித்தும், அதற்கான அடுத்தகட்ட போராட்டம் குறித்தும் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று வைகொ தெரிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications