ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் சேவை வார இறுதிகளில் நிறுத்தம்
ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் சேவை இன்று தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
சென்னை: இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இனி வார இறுதி நாள்களிலும் குறிப்பிட்ட நேரத்தில் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவது நிறுத்தப்படும்.
மின்சார கட்டணம் செலுத்த ஏராளமானோர் மின்சார அலுவலகங்களில் கூடுவதால் போஸ்ட் ஆபிஸ், வங்கிகளில் செலுத்தலாம் என்ற நடைமுறை உள்ளது.

மேலும் அங்கும் கடைசி நேரத்தில் முண்டியடிப்பதை தவிர்க்கும் விதமாக சில நகரங்களில் ஆன்லைன் மூலமாக உட்கார்ந்த இடத்தில் இருந்தும் கொண்டு மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர்,
இந்நிலையில் சர்வர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் சேவை இன்று பிற்பகல் 3 மணி வரை நிறுத்தப்படுகிறது. மேலும் இனி வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 10.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி வரை இந்த சேவை நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications