இனி திருச்சியிலும் “ஆன்லைன் விசா” - 75 நாடுகளுக்கு... 15ம் தேதி முதல் அமல்
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஆன்லைன் விசா வழங்கும் சேவை வரும் 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவில் சுற்றுலா விசா பெற வேண்டும் என்றால் இந்திய தூதரகத்தை அணுகி அதற்கான ஆவணங்களை அளித்து நீண்ட நாட்களுக்கு காத்திருக்க வேண்டியிருந்தது.
குறைந்தது 30 நாட்களுக்கு மேல் முழுமையான விசாரணைக்கு பிறகு விசா பெறுவது நடைமுறையில் இருந்து வந்தது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர தயக்கம் காட்டி வந்தனர்.

சுற்றுலாவிற்கு ஊக்கம்:
இந்த நிலையில், மத்திய அரசின் குடியுாிமை துறை வெளிநாட்டு பயணிகளின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக ஆன்லைன் விசாவை அறிமுகம் செய்தது.
ஆன்லைன் விசா அறிமுகம்:
முதற்கட்டமாக மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம், கொச்சி, கோவா ஆகிய 9 விமான நிலையங்களில் ஆன்லைன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
திருச்சிக்கும் அனுமதி:
இதை தொடர்ந்து ஜெய்ப்பூர், லக்னோ, கயா, அகமதாபாத், திருச்சி, அமிர்தசரஸ் ஆகிய விமான நிலையங்களில் ஆன்லைன் விசா வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் ஆன்லைன் விசா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
முடுக்கி விடப்பட்ட உட்கட்டமைப்பு பணிகள்:
இந்நிலையில் புதிய முனையத்தில் விமானநிலைய நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. தொடர்ந்து அதற்கான மென்பொருள், கேமரா, பையோ மெட்ரிக் ஆகியவை பொருத்தப்பட்டு வருகிறது.
75 நாடுகளுக்கு ஆன்லைன் விசா:
இதில் 75 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்க உள்ளதால் அந்த நாடுகளின் மென்பொருள் வருவது மட்டுமே காலதாமதம். வரும் 15ம் தேதி ஆன்லைன் விசா வழங்கும் சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications