For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும்தான் ரஜினியுடன் போட்டோ எடுக்க முடியும்..ரசிகர் மன்ற நிர்வாகி அதிரடி!

அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும்தான் நடிகர் ரஜினிகாந்துடன் போட்டோ எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும்தான் நடிகர் ரஜினிகாந்துடன் போட்டோ எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளார்.

Only those who have ID cards will be allowed to take photo with Rajinikanth: Sudhakar

6 நாட்கள் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் தான் அனுமதி.

Only those who have ID cards will be allowed to take photo with Rajinikanth: Sudhakar

அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அடையாள அட்டை வழங்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்ட உறுப்பினர்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்கள் வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Rajinikanth fan club manager Sudhakar said that only those who have ID cards will be allowed to take photo with Rajinikanth. Rajinikanth going to meet his fans from coming 26th to 31st.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X