Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈழத் தமிழர்களால் திரைத்துறை பெற்றதே அதிகம்... லண்டனில் இருந்து சேரனுக்கு 'பொளேர்' கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருட்டு விசிடி விவகாரத்தில் ஈழத் தமிழர்களை குற்றம்சாட்டி இயக்குநர் சேரன் பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.

லண்டனில் இருந்து ஈழத் தமிழர் Parameswaran Subramaniyam என்பவர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சேரனுக்கு எழுதிய கடித விவரம்:

இயக்குனர் சேரன் அண்ணாஅவர்களுக்கு வணக்கம்

நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களுக்கு பங்களிப்பு செய்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Open letter from Eelam Tamil to Director Cheran

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஈழத்தமிழர்கள் சிலர் தமிழ்ப் படங்களை திருடி வெளியிடுவதற்கு முக்கிய காரணம் என குற்றஞ்சாட்டியதோடு, அதற்காக ஈழத்தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்தியதற்காக அருவருப்பு அடைகின்றேன் என குறிப்பிட்டு பேசியுள்ளீர்கள். உலகம் அறிந்த நீங்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் எதற்கும் எதற்கும் முடிச்சு போடுவது என வரைமுறையற்று திருட்டு படங்கள் வெளியிடுபவர்களையும், விடுதலைக்கான போராட்டத்தையும் தாழ்மைப்படுத்தியுள்ளீர்கள்.

உங்கள் மிகவும் தவறாக கருத்தை திரும்ப பெற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றேன். உங்கள் கருத்தையொட்டி நான் சில கேள்விகள் கேட்க விரும்புகின்றேன்.

நீங்கள் எப்பொழுதாவது தமிழகத்தில் வாழ்வதற்கு அருவருப்பு அடைந்ததுண்டா? காரணம் நீங்கள் குறிப்பிட்டபடியே தமிழகத்தின் மூலை முடுக்கில் உள்ள அனைத்து திரைப்பட ஒளிப்பட விற்பனை கடைகளிலும் திருட்டு படங்கள் விற்கப்படுகின்றது. ஆனால் இப்பொழுதெல்லாம் படப்பிடிப்பு நடைபெறும்போதே வெளிவருகின்றதே அதையெல்லாம் யார் வெளியிடுகின்றார்கள்

Open letter from Eelam Tamil to Director Cheran

உலக திரை என இன்று தமிழகம் பேச முக்கிய காரணம் ஈழத்தமிழர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தமிழக திரைத்துறையை இன்று உலகத்தில் சிகரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றவர்கள் ஈழத்தமிழர்கள்.

ஈழத்தமிழர்களால் தமிழக திரைத்துறை இழந்ததை விட பெற்றதே அதிகம் என்பதை நீங்கள் கூட மறுக்க மாட்டீர்கள். நீங்கள் கூறியதை விட பல அருவருப்பான சம்பவங்களை திரைத்துறையினர் புலம்பெயர் நாடெங்கிலும் அறங்கேற்றுகின்றார்கள், ஆனால் அவற்றை பேசுவதனால் அவைகளால் எவ்வித நன்மைகளும் இல்லை.

இன்று தமிழ் சினிமா வரலாற்றில் அதிக செலவில் படமெடுப்பதும், ( அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது வேறு) நடிகர் சங்கத்திற்கு அதிக நன்கொடை கொடுத்தவர்களில் ஒருவர் என அவர்களும் ஈழத்தமிழர்கள்தான்.

அதுமட்டுமல்ல சேரன் அண்ணா அவர்களே புலம்பெயர் நாட்டில் இருந்து அல்லது ஈழத்தில் இருந்து பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என படையெடுத்தார்கள் இவர்களில் ஒருவரையாவது குறிப்பிட்டு இவரை நாங்கள் வளர்த்தெடுத்து அதரவு வழங்கினோம் எனக் கூற முடியுமா? பல ஈழத் தயாரிப்பாளர்கள் பல கோடிகளை தமிழகத்தில் தொலைத்தவர்களாகவே திரும்பியுள்ளார்கள். தமிழ் திரையுலகில் வெற்றி பெற்று திரும்பிய தமிழன் என்று இதுவரை எவரும் இல்லை ஏன் என்ன காரணம், அதற்காக நாங்கள் தமிழகத்தை அல்லது தமிழ் திரையுலகை நினைத்து அருவருப்படைந்தோமா? ஆனால் நாம் புலம்பெயர் நாடு, ஈழம் என வந்த அனைத்து தமிழக திரைத்துறையினரையும் சிறப்பித்தே அனுப்பியுள்ளோம் என்பதை மறுப்பீர்களா?

நீங்கள் போராடியது வீழ்ந்துபோன மாவீரர்களுக்காகவும், விடுதலையை நேசித்த மக்களுக்காகவுமா, அல்லது திருட்டு படங்கள் வெளியிடுபவர்களுக்காகவா?

அதீத இலாபம் பெறும் ஆசையே திருட்டு படங்கள் வெளிவர காரணங்கள். நீங்கள் இனி தமிழகத்தில் வெளியிட்டு சில வாரங்கள் கழித்து புலம்பெயர் நாடுகளில் படங்களை வெளியிடுங்கள் பார்ப்போம், மாட்டீர்கள் ஏன் தெரியுமா அதிக லாபம் வேண்டும் என்ற ஆசைதான். தமிழ் திரைத்துறையின் பேராசைதான் இந்த திருட்டு படங்கள் வெளிவர காரணங்கள் என்பதை மறுக்க முடியுமா?

புலம்பெயர் நாடுகளில் இருந்துதான் திருட்டு படங்கள் வெளிவருகின்றது என்பது உறுதி என்றால், காலம் தாழ்த்தி புலம்பெயர் நாடுகளில் வெளியிடுங்கள் பின்பு எங்கிருந்து திருட்டு படங்கள் வெளிவருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். திருட்டு படங்கள் தடுக்க இதுவே சிறந்த திட்டம் அல்லது தமிழகத்தில் வெளியிட்ட பின்பு புலம்பெயர் நாடுகளில் ஒளித்தட்டிலும், திரையரங்கிலும் வெளியிடுங்கள் யாருக்கு எதில் வேண்டுமோ அதில் பார்க்கட்டும்.

திருடப்படுவதற்கு முன்பே வெளியிட்டால் திருட்டை தடுக்கலாம் அல்லவா. மீண்டும் குறிப்பிடுகின்றேன் அதிக ஆசைதான் இந்த திருட்டு படங்கள் வெளிவர காரணம்.

திருட்டு படங்கள் ஈழத்தமிழர்கள்தான் வெளியிடுகின்றார்கள் என்பதை எந்த ஆதாரத்தில் கூறினீர்கள்., ஆதாரம் இருந்தால் வெளிநாட்டு வாழ் சில தமிழர்கள் என்பதோடு முடித்திருக்கலாம். ஆனால் எமக்காக போராடியதற்காக அருவருப்படைந்ததை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சிந்தியுங்கள் பேசும்முன், ஏனெனில் நீங்கள் ஒரு சிறந்த இயக்குனர்.

நன்றியுடன்
சு.பரமேஸ்வரன்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+