தொடரும் அதிருப்தி... செய்யூர் அதிமுக வேட்பாளருக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய தொண்டர்கள்!
காஞ்சிபுரம்: செய்யூர் சட்டசபைத் தொகுதியில், வெளித்தொகுதியில் இருந்து வேட்பாளரை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தங்கள் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அது முதற்கொண்டு வேட்பாளரை மாற்றக் கோரி, ஆங்காங்கே அதிமுகவினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

வேட்பாளரை மாற்றக் கோரி சேலத்திலும், சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டிற்கு முன்னதாகவும் அதிமுக தொண்டர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவங்களும் அரங்கேறியது.
இதற்கிடையே சில தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை மாற்றி வருகிறார் ஜெயலலிதா.
இந்த சூழ்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தனித் தொகுதி அதிமுக வேட்பாளரான முட்டுக்காடு முன்னாள் ஊராட்சித் தலைவர் முனுசாமியை மாற்றக்கோரி, அவருக்கு எதிராக ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தொகுதிக்கு சிறிதும் தொடர்பில்லாத ஒருவரை அதிமுக தலைமை செய்யூரில் நிற்க வைத்துவிட்டதாகக் கூறும் அக்கட்சித் தொண்டர்கள், முனுசாமியை மாற்றி விட்டு உள்ளூர் வேட்பாளருக்கு சீட் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications