ஏழைப்பங்காளனே! போஸ்டர் ஒட்டியவரின் தாய் போலீசில் புகார்...கொலை மிரட்டல் வருவதாக குற்றச்சாட்டு
சென்னை ராயபுரம் மற்றும் வடசென்னை தொகுதியில் நிதியமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராகபோஸ்டர் ஒட்டியவருக்கு மிரட்டல் வருவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை ராயபுரம் தொகுதியில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த தேவதாசுக்கு கொலை மிரட்டல் வருவதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அமைச்சர் ஜெயகுமார் தொகுதி மேம்பாடு மற்றும் மீனவர் நலனில் அக்கறை கொள்ளாததை கண்டித்து நேற்று அவரின் சொந்த தொகுதியான ராயபுரம் மற்றும் வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த போஸ்டரில் 'சொந்த பங்களாவில் சகல வசதிகளுடன் வசித்து வரும் ஏழைப்பங்களானே!... சொந்த மகனை சசிகலா உதவியால் எம்.பியாக்க உன்னால்...உனக்காக 26 ஆண்டுகளாக உழைத்த எந்த மீனவ மக்களை உயர்த்தியுள்ளாய்?" என்று கேள்வி எழுப்பும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. போஸ்டர்களைக் கண்டு பயமில்லை என்று நிதியமைச்சர் ஜெயகுமார் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் குண்டர்களை ஏவி கொலை மிரட்டல் விடுப்பதாக போஸ்டர் ஒட்டிய ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு அணியை சேர்ந்த தேவதாஸின் தாயார் சென்னை மாநகர காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
நிதியமைச்சர் ஜெயகுமார் தனது பலத்தை பயன்படுத்தி போலீசாரை தூண்டிவிட்டு பொய் வழக்குகள் போடுவோம் என்று தொடர்ந்து மிரட்டுவதோடு, தொடர்ந்து தொல்லைகளை ஏற்படுத்தி வருவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ராஜம்மாள் கொடுத்துள்ள புகாரில் காரணமேயின்றி தன்னுடைய பேரன் எபினேசரை பிடித்து சென்றுள்ளதோடு தேவதாஸ் வரும் வரை தன்னுடைய குடும்பத்தினர், உறவினர்கள் மீது பொய் வழக்கு போடுவோம் என்று போலீசார் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயகுமார் தூண்டுதலின் பேரில் செயல்படும் குண்டர்கள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டவிரோத காவலில் உள்ள எபினேசரை விடுவிக்க வேண்டும் என்றும் மனுவில் ராஜம்மாள் கோரியுள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications